tamilnadu

img

போலி பாஸ்போர்ட் விவகாரம்... வீட்டுக்காவலுக்குச் செல்லும் ரொனால்டினோ

அசுன்சியன்
பிரேசில் கால்பந்து உலகின் ஜாம்பவான் ரொனால்டினோ 2002-ஆம் உலகக்கோப்பையை அந்நாட்டுக்குப் பெற்றுத் தந்தவர். 2015-ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், அதன் பின் கால்பந்து தொடர்பான நிகழ்ச்சியில் மட்டும் பங்குபெற்று வந்தார். 

இந்நிலையில், கடந்த  5-ஆம் தேதி பாராகுவே நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்  ரொனால்டினோ தனது சகோதரர் ரொபேர்ட்டோ ஆஸ்சிஸ் உடன் தங்கியிருந்தார். போலீசார் சாதாரண சோதனை நடத்திய பொழுது ரொனால்டினோவின் பாஸ்போர்ட் போலியானது என தெரியவர சகோதரருடன் பராகுவே நாட்டிலுள்ள ஒரு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்பு இருவரும் தலா 8 லட்சம் டாலர் பிணைத்தொகை செலுத்தி தற்போது ஜாமினில் வந்துள்ளனர். எனினும் விசாரணை முடியும் வரை வீட்டுக்காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இருவரும் நட்சத்திர விடுதியில் வீட்டுக் காவலில் உள்ளனர். 
 

;